செவ்வாய், நவம்பர் 01, 2011

குஷ்டம் போக்கும் -முருக கடவுள் தந்திரம் -அருணகிரி நாதருக்கு உபதேசித்தது !

பொதுவாகவே, சித்த மருத்துவ நண்பர்களுக்கும் ,யோகம் பயிலும் ஆன்மீக நண்பர்களுக்கும் , உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைப் பற்றிய பாடங்கள் தெரிந்து இருக்கும் .ஒவ்வொரு ஆதாரங்களுக்கும் ,தமிழ் மொழியில்  ஒரு வித்து  சொல் கொடுக்க பட்டிருப்பதும் ,நாம் அறிந்ததே !ஆனால் தற்கால சித்த  மருத்துவர்கள் ,இந்த ஆதார வித்து சொற்களை ,தங்கள் மருத்துவ பயன் பாட்டிற்கு,பயன் படுத்துகிறார்களா !என்று பார்த்தோமானால்  இல்லை என்றே கூற வேண்டும் .நானும் அவ்வாறே தெரிந்து கொள்ளாத காலம் இருந்தது.மேற் கண்ட யோகம் ,ஸ்ரீ வித்யா  பூஜையின் போது ஏற்படும் அதிக அளவு வெப்ப தாக்குதலில் இருந்து ,மீள்வதற்காக என் குருவால் உபதேசிக்கப் பட்டது .                                                                                         உதரணமாக மூலாதாரத்திற்கு வித்து" நகாரம்" என்று நமக்கு  தெரியும் .இது ஒரு  மந்திரத்தால் (மந்திரம் -மனதின் திடம் ) செய்யக் கூடிய தந்திர யோகம் .மிக எளிமையானது .வயதானவர்களும் ,நோயாளிகளும் எளிதில் செய்யக் கூடிய ஒரு பயிற்சி .                                                                                                                           ஆறு ஆதாரங்களுக்கு தலைவனாக ,ஆறு முக கடவுளாக சித்தரித்து ,அவனுக்கு வடிவு தந்து ,எல்லா விஷய (சித்த மருத்துவமும் கூட ) ஞானத்தையும்  கொடுக்க கூடியவனாக ,உருவகப் படுத்தி ,மூன்றாவது கண் என்று சொல்லக் கூடிய பீனியல் சுரப்பி அமைந்திருக்கும் இடத்தில் அமர்த்தி ,அந்த சுரப்பி ,தன் சுரப்பை சுரந்து கொண்டு இருக்கும் வரை ,ஒவ்வொரு மனிதனும் குழந்தையாகவே இளமையோடு இருப்பான்! என்பதை உணர்துவதர்க்காகவே முருகனை  குழந்தையாகவே இருத்தி சென்ற சித்தர்களின் திருவிளையாடல்கள் எந்நே!                                                                                          """"""'சொல் அற-சும்மா இரு """"""""-இது அருணகிரி நாதருக்கு ,முருகன் உபதேசித்தது .எந்த நிலையில் உபதேசித்தார் தெரியுமா !அருணகிரி நாதர் காம வேட்கையினால் ,பல பெண்களுடன் களிப்புற்று ,அதன் விளைவாக உடல் முழுவதும் வெப்பு நோய் என்னும் குஷ்ட நோய் தாக்கி துன்புற்று ,மேலும் காம வேட்கை தீராமல் அலைந்த போது ,அருணகிரி நாதரின் மூத்த சகோதரி ,அவரின்  துன்பம் பொறுக்காமல் , தன்னையே உன் காம வேட்கைக்கு பயன் படுத்த கோரியது கேட்டு மனம் வெதும்பி  ,பஞ்ச பூத தலமாம் -தீ பூதத்தின் திருஅண்ணாமலை கோபுர உச்சியில் இருந்து விழும் போது ,உபதேசித்த சொற்கள் அவை .ஒரு ஒற்றுமையை பாருங்கள் .----------------முருகன் -பீனியல் சுரப்பி இடம் (சந்திர மண்டலம்),,அருணகிரிநாதர் -இருதயம் (சூரிய மண்டலம்),,நோய் -குஷ்டம் (வெப்பு நோய்கள் ,தோல் நோய்கள் ),நோய் காரணம் -வெப்ப (பித்த ) அதிகரிப்பு (காரண விழும் இடம் -தீ பூத திரு அண்ணாமலை )                                                                                                                                             தந்திரப்    பயிற்சி:--------------------------------------------------------------------------------------------------------------------------------"""சொல் அற"" -பேசாமல் இருத்தல் .எப்படி ?இங்கே ஒரு சூட்சும நிலை விளக்க படுகிறது .சாதாரண நிலையில் நமது நாக்கானது ,வாயை மூடிக் கொண்டு இருந்தாலும் ,சிறு அசைவுடன் இருக்கும் ,அப்பொழுது ஒலி அலைகள் உருவாகாமல் இருக்க முடியாது .ஆனால் அஸ்வினி முத்திரை என்று சொல்லக் கூடிய ,நாக்கை மேல் நோக்கி உள் மடக்கிய நிலையில் ,அந்த அசைவும் ,உமிழ் நீர் சுரத்தலும் தடுக்க படுவதால் ,ஒலி அலைகள் எழுவது கட்டுப் படுத்த படுகிறது .                                                                                                                             """"""""""""""""""""""""சும்மா இரு """-என்பதன் பயிற்சி நிலை -"சும்"''என்ற ஒலி அலைகளை ,சூரிய மண்டல நடுவில் ,மனதிற்குள்ளாக  உச்சரித்து கொண்டே இருத்தல் ஆகும் .                                                                                                                                       சூரிய மண்டலம் என்பது பற்றிய ஒரு செய்தி ,இந்த தந்திரத்தின் உண்மையை விளக்குவதற்காக இங்கே கூறப் படுகிறது .சிவ பூஜை செய்பவர்களுக்கும் ,சந்தியா வந்தனம் செய்பவர்களுக்கு தெரிந்த விஷயம் இது .                                                 சூரிய மண்டலம் பூஜை முறையில் -அகோர ஹிருதயாய நமக!என்று அந்த இடத்தில்,சுக்கிர விரல் (பெரு விரல்),சூரிய விரல் (மோதிர விரல் )இணைத்து  தொட்டு ,மந்திரம் (மனதின் திடம் )சொல்வார்கள் .கோரம்  என்றால் சிதைந்த என்று பொருள் .அகோரம் என்றால் அழகான என்று பொருள்                                                                              பயிற்சியின் விளைவுகள் :------------------------------------------------------------------------------------------------------*சும்  என்ற தமிழ் வித்து சொல் ஒளியை ,தியான முகமாக ,நெஞ்சின் நடுவில் சூரிய மண்டலத்தில் ,தொடர்ந்து எந்த ஒரு சிந்தனையும் இன்றி உச்சரிக்கும் போது ,*ஒலி சிதறல்கள்  தோன்றும் ,தொடர்ந்து உச்சரிக்க உச்சரிக்க ,ஒலி சிதறல்கள் விரியும் .அடுத்த அதி சூட்சும நிலை என்ன தெரியுமா !உங்கள் நாக்கானது,தானாகவே உள் இழுக்க தொடங்கும் .கண்கள் புருவ மத்தியை  நோக்கி இழுக்கப் படும் .உள் இழுக்க ,இழுக்க உங்கள் உள் நாக்கின் மேல் இருந்து சளி போன்ற  ஒரு பொருள் ,கீழிறங்க ஆரம்பிக்கும் .இது நிகழ ஒரு குறிப்பிட்ட நேரம் வரை பொறுமையாக இருத்தல் வேண்டும் .இந்த நிலையில் உங்கள் தாடை பகுதியிலிருந்தும் ,சில சுரப்புகள் வழிய ஆரம்பிக்கும் .இவை எல்லாமே சூரிய மண்டலத்தால் உறிஞ்சி கொள்வதை உணர்வீர்கள் .                                                                                                                                       இந்த யோகதிலிருது அருணகிரி நாதர் விழிக்கும் பொழுது ,அவரது குஷ்ட நோய் நீங்கியிருந்தது .ஞானம் பெற்றார் .                                                                               பல நோயாளிகளிடம் ,இந்த தந்திரத்தை பயிற்சி செய்ய சொல்லியிருக்கிறேன் .குறிப்பாக ,பித்த நோய்  என்று அழைக்கப் படும் ,அதி குருதி அழுத்தம் ,நீரிழிவு ,தோல் நோய் உள்ளவர்கள் .இந்த தந்திர யோகம் மிக சிறப்பாக ,இருதய துடிப்பின் ,அளவை சம நிலையில் வைக்கிறது .தோல் நோய்களில் சிறப்பான முன்னேற்றம் ,பழக,பழக  நோய் நிலையிலிருந்தே விடு படுகிறார்கள் .சிலருக்கு தொண்டை வலி  ;சுவாமிஜி  கரிசாலை சாறு +சுத்த நெய்  சம அளவு எடுத்து ,காய்ச்சி ,வலது பெரு விரலில் தொட்டு  ,தினமும் காலை எழுந்த உடன் ,அண்ணாக்கில் தேய்த்து விடக் கூறினார் .அனுபவியுங்கள் ,பதில் உரையுங்கள் ,மருத்துவ நண்பர்களே ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக